search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒக்கி புயல்"

    கடந்தாண்டு இறுதியில் வீசிய ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 188 பேருக்கு அரசுப்பணி அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    கடந்தாண்டு இறுதியில் தமிழக கடலோர பகுதிகளில் ஒக்கி புயல் தாக்கியது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பல மீனவர்கள் இந்த புயலில் சிக்கி பலியாகினர். பலர் மாயமான நிலையில், அவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

    இதனால், புயலில் பலியான மீனவர்களின் எண்ணிக்கையும் துல்லியமாக இல்லை. பலியான மற்றும் காணமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு அப்போது நிவாரணம் அளிக்கப்பட்டது. மேலும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது.

    இதற்கேற்ப அவர்களின் குடும்ப சூழல்களை கருத்தில் கொண்டு 188 பேருக்கு அரசு வேலை வழங்க கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு பணி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையில் அவர்களுக்கு பணி ஒதுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    ×